கோத்தா கினாபாலு,மார்ச் 2
பயணிகள் ரயில் ஒன்று, தண்டவாளப்பாதை முடிவுறும் கடைசி மூலையின் தடுப்பை மோதி, சுவரை உடைத்துக்கொண்டு விபத்துக்குள்ளானதில் பயணிகள் பீதியில் மூழ்கினர்.
இச்சம்பவம் இன்று காலை 7.08 மணியளவில் சபா, Sembulan நிலையத்தில் நிகழ்ந்தது. பியபோர்ட் B டிலிருந்து ,செம்புலான் னுக்கு சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்தது.
ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய அந்த பயணிகள் ரயில், கட்டுப்பாட்டை இழந்து எல்லையைக் கடந்து விட்டதால், ரயில்பாதை முடிவுறும் கடைசி மூலையின் தடுப்பை மோதியதாக கூறப்படுகிறது.
ரயில் பெட்டிகளின் ஊராய்வில் ஏற்பட்ட பலத்த சத்தம், பயணிகளை அதிர்ச்சியிலும், பதற்றத்திலும் ஆழ்த்தியது. இதில் யாரும் காயம் அடையவில்லை என்று தெரிவிக்கப்ட்டது.