பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்தார்

மலாக்கா, மார்ச் 8 –

மலாக்கா, தஞ்ஜோங் மீஞ்ஞாக் தேசிய இடைநிலைப்பள்ளிக்கு செல்லும் சாலை சந்திப்பில் மோட்டார் சைக்கிளை கார் ஒன்று மோதித் தள்ளியத்தில் சபா மலேசிய பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் உயர்கல்விக்கூட மாணவி உயிரிழந்தார்.

இச்சம்பவம் இன்று காலை 9.45 மணியளவில் நிகழ்ந்தது. மோட்டார் சைக்கிளில் பயணித்தவரான 22 வயது டஹியா அதிரா மொகமாட் ப்ரிட்ச் என்பவரே இச்சம்பவத்தில் உயிரிழந்தததாக போலீசார் அடையாளம் கூறினர்.

அந்த இடைநிலைப்பள்ளியின் ஆசிரியை செலுத்திய நீசான் கெரான்ட் லிவினா ரக காரில் அந்த மாணவி மோதப்பட்டு, சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்