பல்பொருள் அங்காடி, தீப்பிடித்து எரிந்தது

மன்ஜோய், மார்ச் 11 –

மன்ஜோய் யில் உள்ள அரசாங்கத்திற்கு பிரபல மொத்த வியாபாரத் தளமான மைடின் தீ விபத்தில் சிக்கியதாக அதன் நிர்வாகம் நேற்று தெரிவித்திருந்தது.

இதுக்குறித்த அனைத்து தகவல்களும் உட்பட அதிகாரப்பூர்வ அறிக்கைகளும் அவ்வப்போது வெளியிடப்படும் என்று மைடின் தனது முகநூல் அகப்பக்கத்தில் அறிவித்திருந்தது.

இந்த தீ விபத்தை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் வளாகத்தை விட்டு வெளியேறியதாக தெரியவந்துள்ளது.

நேற்று இரவு 7:00 மணியளவில் நிகழ்ந்த தீ விபத்தில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முழு வீச்சில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

அச்சம்பத்தின் போது காவல்துறை, மலேசிய தன்னார்வத்துறை ஆகியோர் நிலைமையை கட்டுப்படுத்தவும் வளாகத்தின் அருகில் இருக்கும் பொதுமக்களை பாதுகாக்கவும் பல முயற்சிகளில் ஈடுபட்டதாக பேராக், மலேசிய தீயணைப்பு, மீட்புப்படை துறையின் உதவி இயக்குநர் சபரோட்சி னோர் அகமாட் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்