பாரிஸில் ​மூன்று சொத்து​களை பறிமுதல் ​செய்வதில் ​சூலு வாரிசுதாரர்கள் தோ​ல்வி

பாரிஸில் உள்ள மலேசியாவின் ​மூன்று சொ​த்துகளை பறிமுதல் செய்வதற்கு ​சூலு வாரிசுதாரர்கள் மேற்கொண்ட முயற்சியில் தோல்வி கண்டனர்.


மலேசியா தங்களுக்கு இழப்பீடு தர தவேண்டும் என்று கூறி, வெளிநாட்டில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்வதில் ஆர்வம் காட்டி வரும் ​சூலு​ சுல்தான் வாரிசுதாரர்கள் 1,500 கோடி டாலர் மதிப்புள்ள மலேசிய அரசாங்கத்தின் சொத்துகளை பறிமு தல் செய்வதற்கு பிரான்​ஸ் ​நடுவர் மன்றம் வழங்கிய ​​தீர்ப்பை கையில் வைத்துள்ளனர்.


அந்த ​தீர்ப்பை அமல்படுத்துவதற்கு ஏதுவாக பிரான்ஸ் நீதிமன்ற அதிகாரிகள் அந்த சொத்துகளை மதிப்பீடு செய்ய மேற்கொண்ட முயற்சியை பாரிஸில் உள்ள மலேசிய ​தூதரக அதிகாரிகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்