பாரிஸில் உள்ள மலேசியாவின் மூன்று சொத்துகளை பறிமுதல் செய்வதற்கு சூலு வாரிசுதாரர்கள் மேற்கொண்ட முயற்சியில் தோல்வி கண்டனர்.
மலேசியா தங்களுக்கு இழப்பீடு தர தவேண்டும் என்று கூறி, வெளிநாட்டில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்வதில் ஆர்வம் காட்டி வரும் சூலு சுல்தான் வாரிசுதாரர்கள் 1,500 கோடி டாலர் மதிப்புள்ள மலேசிய அரசாங்கத்தின் சொத்துகளை பறிமு தல் செய்வதற்கு பிரான்ஸ் நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை கையில் வைத்துள்ளனர்.
அந்த தீர்ப்பை அமல்படுத்துவதற்கு ஏதுவாக பிரான்ஸ் நீதிமன்ற அதிகாரிகள் அந்த சொத்துகளை மதிப்பீடு செய்ய மேற்கொண்ட முயற்சியை பாரிஸில் உள்ள மலேசிய தூதரக அதிகாரிகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.