கோத்தாபாரு, மார்ச் 21 –
கோத்தாபாரு, பூலாவ் மலாக்கா, பாலத்திலிருந்து குதித்த ஆடவர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டார்.
நேற்று இரவு 9.20 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 49 நபர் காப்பாற்றப்பட்டு, போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அந்த ஆற்றுப்பாலத்திலிருந்து ஆடவர் ஒருவர் குதித்து விட்டதாக பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து துரித வேகத்தில் தேடல் நடவடிக்கையை முடுக்கி விட்டதாக கோத்தாபாரு மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி மொகமாட் ரொசிடி டாவுட் தெரிவித்தார்.
போலீசாரும், தீயணைப்பு, மீட்புப்படையினரும் முழு வீச்சில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் அந்த நபர் எவ்வித காயமின்று மீட்கப்பட்டதாக ஏ.சி.பி மொகமாட் ரோசிடி குறிப்பிட்டார்.