கோர விபத்ல் தந்தை பலி, மகள் படுகாயம்

கோலாலம்பூர், மார்ச் 21 –

கோலாலம்பூர் அருகில் செலாயாங், ஜாலான் சுங்கை துவாவில் மோட்டார் சைக்கிள் ஒன்று, கனரக வாகனத்தின் பின்புறத்தில் மோதியதில் தந்தை ஒருவர் உயிரிழந்த வேளையில் மகள் கடுமையான காயங்களுக்கு ஆளானார்.

இச் சம்பவம், நேற்று மாலை 6 மணியளவில் நிகழ்ந்தது. மோட்டார் சைக்கிளுடன் லோரியின் சக்கரப்பகுதியில் சிக்கி, அரைபட்ட 52 வயது நபர், சம்பவ இடத்திலேயே மாண்டார். அவரின் மகள் கடும் காயங்களுக்கு ஆளாகி செலாயாங் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி நோர் அரிபின் மொகாமாட் நாசிர் தெவித்தார்.

தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அந்த நபர், வேகக்கட்டுப்பாட்டை இழந்து, லோரியின் பின்புறத்தில் மோதியதாக பூர்வாங்க விாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்