பாலியல் பலாத்காரம், வழிப்பறி கொள்ளை : இரு பாகிஸ்தானியர்கள் கைது

சிலாங்கூர், செர்டாங் KTM ரயில் நிலையத்தின் மேம்பாலத்தில் பாலியல் பலாத்காரம் மற்றம் வழிப்பறி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்று நம்பப்படும் இரு பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவ்விரு பாகிஸ்தானியர்களும் கடந்த திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் செர்டாங், ஶ்ரீ கெம்பாங்கான், தாமான் செர்டாங் பெர்டானாவில் ஒரு ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் கைது செய்யப்பட்டதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் A.A. அன்பழகன் தெரிவித்தார்.

29 வயதுடைய பாகிஸ்தானிய ஆடவர் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி செர்டாங் கேடிஎம் பாலத்தில் மாது ஒருவரிடம் வழிபறி கொள்ளையில் ஈடுபட்டுள்ள வேளையில் 23 வயதுடைய மற்றொரு பாகிஸ்தானிய ஆடவர் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி அதே இடத்தில் 29 மாதுவை பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகிகப்படுகிறது என்று அன்பழகன் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்