பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நான்கு இந்திய பிரஜைகள் மீட்பு

ஜோகூர் பாரு, மார்ட் 17 –

ஜோகூர் பாரு, வில் பாலியல் வன்கொடுமை நோக்கத்திற்காக மனித கடத்தலில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நான்கு இந்திய நாட்டை சேர்ந்த பெண்களை போலீசார் பாதுகாப்பாக மீட்டெடுத்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:15 மணியளவில் 24 முதல் 39 வயதிற்கு உட்பட்ட பாதிக்கப்பட்ட பெண்களை ஜோகூர் குற்றப்புலனாய்வுத்துறை,ஜோகூர்பாரு செலாத்தான் மாவட்ட காவல்துறை தலைமையகம் மற்றும் இரகசிய கிளைகள், சூதாட்டம் மற்றும் ஒழுக்கக்கேடு பிரிவின் டி7 ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் அப்பெண்கள் காப்பாற்றப்பட்டதாக ஜோகூர் போலீஸ் தலைவர் கொமிசியோனர் ம்.குமார் தெரிவித்தார்.

இச்சம்பவம் லர்கின் இடாமான் னில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது பாதிக்கப்பட்ட பெண்கள் மீட்கப்பட்டதாக ம்.குமார் கூறினார்.

இச்சோதனையில் விபச்சார விடுதியின் மேலாளராகவும், கடத்தல்காரராகவும் இருப்பதாக சந்தேகிக்கும் 32 வயதுடைய உள்ளூர் ஆடவர் உட்பட 36 வயதுடைய இந்திய பிரஜையும் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெளிவுப்படுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்