ஜோர்ஜ் டவுன், ஏப்ரல் 11 –
நோன்புப்பெருநாளின் நீண்ட விடுமுறை, மற்றும் இரண்டு நாள் இலவச டோல் கட்டண சலுகை ஆகியவற்றை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்ட மக்கள் அதிகளவில் தங்களின் இந்த விடுமுறையை பினாங்கில் கழித்துள்ளனர்.
கோடை காலமாக இருந்த போதிலும் பினாங்கில் இந்த நீண்ட விடுமுறையில் 24 லட்சம் வாகனங்கள் தீவுக்கும், பெருநிலத்திற்கும் சென்று வந்துள்ளதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
பினாங்கின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்ட வேளையில் பிரதான சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்ததாக பெர்னாமாவின் ஆய்வுகள் காட்டுகின்றன.