பேராக், ஏப்ரல் 11 –
பேரா, தன்ஜோங் ரம்பூத்தானில் தனது கணவரின் மரணத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் மாது ஒருவர் கைது செய்யப்பட்டு, 7 நாள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
கணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் 37 வயதுடைய ரோஹிங்யா இனத்தைச் சேர்ந்த மாது, தற்போது குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக பேரா போலீஸ் தலைவர் டத்துக் செரி மொஹாமாட் யுஸ்ரி ஹாசான் தெரிவித்தார்.
25 வயதுடைய ஆடவர் கடந்த செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் இன்னும் கட்டி முடிக்கப்படாத வீடொன்றில் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த நபரின் மரணத்திற்கு குற்றத்தன்மைக்கான அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை.ஆனால், சவப் பிரசோதனையில் அந்த ஆடவர் பலம் கொண்ட ஒரு பொருள் மூலம் தலையில் தாக்கப்பட்டுள்ளார் என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக யுஸ்ரி ஹாசான் குறிப்பிட்டார்.