மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் – ருடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தேநீர் உபசரிப்பில் கலந்து கொண்டார். மாமன்னரின் அழைப்பின் பேரில் இன்று மாலையில் பிரதமர் அன்வார், மாமன்னருடன் சிறிது நேரத்தை செலவிட்டார்.
இஸ்தானா நெகாராவிலிருந்து மாமன்னர், தாமே ஓட்டிச் சென்ற காரில் பிரதமரும் பயணம் செய்தார். அவர்கள் கோலாலம்பூர், பெவிலியன்– னில் உள்ள பாவுல் உணவகத்தில் தேநீர் அருந்தினர் என்ற இஸ்தானா நெகாரா தனது அதிகாரத்துவ அகப்பக்கத்தில் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்துள்ளது.