கோலாலம்பூர், ஏப்ரல் 06-
அடுத்த வாரம் நோன்புப்பெருநாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு அதிகமானோர் , தங்கள் சொந்த கிராமங்களுக்கு செல்லத் தொங்கியிருப்பதால் நாட்டின் பிரதான நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் மெல்ல நகர்கின்றன என்று மலேசிய நெடுஞ்சாலை வாரியமான LLM அறிவித்துள்ளது.
கிழக்குகரையோர மாநிலங்களுக்கான நெடுஞ்சாலை மற்றும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலை ஆகியவற்றில் காலை நிலவரப்படி வாகனங்கள் மெல்ல நகர்கின்றன. இதில் கிழக்குகரையோர மாநிலங்களுக்கான பிரதான நெடுஞ்சாலையான கோலாலம்பூர் – காராக் நெடுஞ்சாலையில் கோம்பாக் டோல் சாவடியிலிருந்து கென்த்திங் செம்ப்பாஹ் வரையில் சுமார் 17 கிலோ மீட்டர் தூரம் வரையில் வாகனப் போக்குவரத்து நிலைக்குத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் வடக்கே நோக்கி, ஸ்லிம் ரிவேர்-ரிலிருந்து சுங்க்காய் வரையிலும், மெனோரா சுரங்கப்பாதையிலிருந்து RnR சுங்கை பேராக் வரையில் வாகனங்கள் மெல்ல நகர்கின்றன.
இதேபோன்று பீடோர்-ரிலிருந்து தாப்பா வரையிலும் வாகனங்கள் மெல்ல நகர்வதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியம் இன்று காலையல் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.