ஜொகூர் மாநிலத்தில் உள்ள முஸ்லீம்கள் பிற இனத்தவரின் வழிப்பாட்டுத் தலங்களுக்குச் செல்ல எவ்வித தடையும் இல்லை என்று மேன்மை தங்கிய ஜொகூர் சுல்தான், sultan ibrahim sultan iskandar தெரிவித்துள்ளார். முஸ்லீம்கள் பிற இனத்தவரின் வழிப்பாட்டுத் தலங்களுக்கு செல்வதற்குத் தடை விதிப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்று சுல்தான் தெளிவுப்படுத்தினார்.
எனினும், பிற இனத்தவரின் சமய சடங்குகள் மற்றும் அவர்களின் சமயம் சார்ந்த வழிபாடுகளில் கலந்து கொள்வதற்கு மட்டுமே முஸ்லீம்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக சுல்தான் விளக்கினார்.
ஒவ்வொரு முஸ்லீமும் தாங்கள் சார்ந்துள்ள சமயத்தின் மீது தீவிர நம்பிக்கை உடையவர்களாக இருப்பதால், இது போன்ற விவகாரத்தைத் தொடர்ந்து நீட்டிக்க தாம் விரும்பவில்லை என்று சுல்தான் தெளிவுப்படுத்தினார்.