பூலாவ் பண்டிங்கில் மூழ்கிய சிறுமி

ஈப்போ, ஜன – 7,

நேற்று கிரிக், பூலாவ் பண்டிங்கில் உள்ள Jeti Mat Shah வில் 9 வயது சிறுமி மூழ்கி உயிரிழந்தார்.

மூழ்கிய சிறுமியின் உடலிலும் சம்பவம் நடந்த இடத்திலும் குற்றச் செயல் நடந்ததாக எந்த அறிகுறியும் காணப்பட வில்லை என கிரிக் போலீஸ் தலைவர் சுல்கிஃப்லி மாஹ்மூட் தெரிவித்தார்.

நேற்று மாலை 6.00 மணி அளவில் தமது மகள் பூலாவ் பண்டிங் அருகே தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்ததாக அச்சிறுமியின் 40 வயது மிக்க தந்தை தெரிவித்ததாக சுல்கிஃப்லி குறிப்பிட்டார்,

மாலை 6.30 மணி அளவில் அச்சிறுமி காணாமல் போனதாகவும் 6.50 மணி அளவில் அவர் சடலம் கரை ஒதுங்கியதாகவும் சுல்கிஃப்லி தெரிவித்தார்.

அச்சிறுமி மூழ்கியதால் மரணம் அடைந்தார் என கிரிக் மருத்துவமனை சவப்பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. இறுதிச் சடங்கிற்காக அச்சிறுமியின் சடலம் அவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்