ரொம்பினில் தொடர்மழை

 

கோலாலம்பூர், ஜன – 7,

 

நாளை வரை பகாங், ரொம்பினில் தொடர் கன மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையமான MetMalaysia கணித்துள்ளது.

 

மேலும், பகாங் மாநிலத்தின் பெக்கான் பகுதி, ஜோகூர் மாநிலத்தின் செகாமாட், குளுவாங், மெர்சிங், கோத்தா திங்கி ஆகிய வட்டாரங்களில் மோசமான வானிலை நிலவக்கூடும் எனவும் MetMalaysia அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

அதே சமயம், பகாங் மாநிலத்தின் மாரான், குவாந்தான், பெரா பகுதிகளிலு ஜொகூரின் தங்காக், முவார் பத்து பகாட், பொந்தியான், கூலாய், ஜோகூர் பாரு ஆகிய பகுதிகளில் கனத்த மழை பெய்யும் எனவும் அம்மையம் குறிப்பிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்