கேளிக்கை மையங்கள் மற்றும் விருந்து உபசரிப்புகளில் பரவசமூட்டும் ஐந்து வகையான போதைப்பொருள்கள் கலந்த பானத்தை விற்பனை செய்யும் போதைப்பொருள் கடத்தல் கும்பலை போலீசார் முறியடித்துள்ளனர்.
ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டது மூலம் கிள்ளான் பள்ளத்தாக்கில் இந்த கும்பலை போலீசார் முறியடித்துள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவின் இயக்குநர் முகம்மட் கமாருடின் முகம்மட் டின் தெரிவித்துள்ளார்.
இந்த கும்பலுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட 39 வயதுடைய நபர், ஒரு பெண் ஆகியோர் கைதானவர்களில் அடங்குவர். 19 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த அறுவரும் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்று முகம்மட் கமாருடின் குறிப்பிட்டார்.