கோலாலம்பூர், மார்ச் 10 –
ஶ்ரீ பெட்டாலிங் ஜெயா வில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் பிறந்த ஆண் குழந்தை ஒன்று கீழே தூக்கி எறியப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அவ்விடத்தில் இருக்கின்ற சி.சி.டி.வி கேமராவை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இது ஒரு கொலை சம்பவம் என்கிற பட்சத்தில், குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரிக்பில்ட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி கு மஷ்ஷாரிமான் கு மஹ்மூட் தெரிவித்தார்.
இதுவரையில் இந்த சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் சந்தேகத்திற்குரிய நபரை போலீசார் தீவிரமாக தேடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக கு மஷ்ஷாரிமான் கூறினார்.
இன்று பிற்பகல் 2 மணியளவில் சவப் பரிசோதனைக்காக அக்குழந்தையின் உடல் யூனிவேர்சித்தி மலாயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டியிருப்பதாக அவர் அறிவித்தார்.