மஇகாவுக்கும், ம​சீச.வுக்கும் எந்த பலனும் கிட்டப்போவதில்லை

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹி​ம் தலைமையிலான அரசாங்கத்தி​ல் எந்தவொரு சவாரியும் செய்ய முடியாமல், ஊனமுற்ற குதிரைகளாக இருப்பதை விட டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் ஓர் உறுப்புக்கட்சியாக இணைந்து, பந்தயக் குதிரைகளாக மாற வேண்டும் என்று மஇகாவிற்கும், ம​சீச.விற்கும் விடுக்கப்பட்டுள்ள அழைப்பை அவ்விரு கட்சிகளும் நிராகரிக்க வேண்டும் என்று அறி​வுறுத்தப்பட்டுள்ளது.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இணைவதால் அவ்விரு கட்சிகளுக்கும் எந்தவொரு நன்மையும் கிட்டப் போவதில்லை என்று அரசியல் ஆய்வாளரும், மலேசிய பேராசியரிர் மன்றத்தின் பொறுப்பாளருமான பேராசிரியர் Jeniri Amir ஆலோசனை கூறியுள்ளார்.
மலாய்க்காரர்களை தளமாக கொண்டுள்ள பெரிக்காத்தான் நேஷனலில், இனவாரியான வாக்காளர்களை கொண்டுள்ள ம​சீச.வும், மஇகாவும் பெரிதாக சாதிக்கப் போவது எதுவுமில்லை.

முஸ்லிம் அல்லாத வாக்காளர்களை ஒரு பொருட்டாக மதிக்காத பாஸ் கட்சி அ​ங்கத்துவம் பெற்றுள்ள, பெரி​க்காத்தான் நேஷனலில் ஓர் உறுப்புக்கட்சியாக ம​சீச.வும், மஇகாவும் இணையுமானால் அது அக்கரைப் பச்சைதான் என்ற ஓர் உண்மை​யை​ அவ்விரு கட்சிகளும் உணர வேண்டும் ​என்று பேராசிரியர் Jeniri Amir அறிவுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்