மக்களை அரசியல் பலிகடாவாக ஆக்கி விடாதீர்கள்

கோத்தா பெலுட், ஜன – 8,

மலேசியாவில் உள்ள சில அரசியல் தலைவர்கள் தங்களின் அரசியல் லாபத்திற்காக மக்களை பலிகடா ஆக்க வேண்டாம் என்று நினைவூட்டப்படுவதாக துணைப் பிரதமர் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

திறந்த மனப்பான்மையைக் கடைப்பிடிக்கும் இந்த நாட்டில் அரசியலில் கருத்து வேறுபாடுகள் அல்லது கொள்கை வேறுபாடுகள் இருப்பதில் சிக்கல் இல்லை. ஆனால், முதலில் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

நாட்டின் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, முதலீடு மற்றும் மக்களுக்கான நல்வாழ்வைக் கொண்டுவரும் திறன் கொண்ட நாட்டின் அரசியலை பேணுவதற்கும், நிலையானதாக இருப்பதற்கும் பிரதமர் அன்வார் இப்ராகிம் கடுமையாக உழைத்து வருகிறார் என்றார்.

அரசியல் தலைவர்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், ஒப்பந்தங்களை முழுமையாய் பின்பற்ற வேண்டும், அதை தங்கள் றாரசியல் கட்சியின் நலனுக்காக இருக்கக் கூடாது. இது மக்களை அரசியலில் பலிகிடாவ்வி விடும் என்றார் அவர்.

சபாவை எடுத்துக் காட்டாகப் பேசிய ஸாஹிட், வேற்றுமையில் ஒற்றுமையாக சபா இருப்பதாகவும், மக்களின் நலனுக்காக சபாவின் ஒத்துழைப்பை அனைவரும் பின்பற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்