மண்வாரி இயந்திரத்தில் மோதி ஒருவர் பலி

பெட்டாலிங் ஜெயா, ஜாலான் ஏரோஅங்காசா 3 -யில் கட்டுமான தளத்தில் உள்ள மண்வாரி இயந்திரத்தில் மோதியதில் லோரி ஓட்டுநர் ஒருவர் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுக்குறித்து நேற்று காலை 9:13 மணியளவில் கிடைக்கபெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர் ஏசிபி முகமது ஃபக்ருதீன் அப்துல் ஹமீத் தெரிவித்தார்.

39 வயதுடைய அந்நிய பிரஜை கட்டுமான தளத்தில் மண் எடுக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த வேளையில் இச்சம்பவம் நடந்துள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக முகமது ஃபக்ருதீன் கூறினார்.

சவப்பரிசோதனைக்காக அவ்வாடவனின் உடல் சுங்கை பூலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக முகமது ஃபக்ருதீன் விவரித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்