மதுபோதையில் இருந்த மூவர் பிடிபட்டனர்

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது போதையில் வாகனத்தை செலுத்திய மூவரை போலீசார் கைது செய்தனர். பண்டான் இண்டாவில் போலீசார் மேற்கொண்ட சாலைத் தடுப்பு சோதனையின் போது இவர்கள் பிடிபட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகம்மட் அஸாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

40 க்கும் 70 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூவர் மீது 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்