2024 ஆம் ஆண்டு பிறந்துள்ள வேளையில் புத்தாண்டு குழந்தைகளாக பேரா மாநிலத்தில் 18 குழந்தைகள் நேற்று பிறந்தன. அக்குழந்தைகளுக்கு பேரா மாநில அரசு பிரத்தியேக பரிசை வழங்கி சிறப்பித்துள்ளது.
பேரா மாநிலத்தின் தேசிய கல்வி சேமிப்பு நிதியாக அந்த குழந்தைகள் சார்பாக மாநில அரசாங்கம் தலா 200 வெள்ளி நிதியை வழங்கியது. ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு இன்று வருகை புரிந்த பேரா மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ சராணி முகம்மட் இந்த நிதியை வழங்கினார்