சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி யின் அதிகாரத்துவ இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பந்தப்பட் நபர், காரின் பின்இருககையில் ஒளிந்து கொண்டு சென்று இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதை ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைவர் இக்பால் இப்ராஹிம் உறுதிபடுத்தியுள்ளார். ஆனால், மேல்விபரங்களை வெளியிட அவர் மறுத்து விட்டார்.
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட காணொளியின்படி ஷா ஆலமில் உள்ள மந்திரி பெசாரின் அதிகாரத்துவ இல்ல வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த நிருபர் ஒருவர், வளைத்துப்பிடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர், இதற்கு முன்பு மந்திரி பெசாரின் இல்லத்தின் வளாகத்திற்குள் நுழைய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.