மந்திரி ​பெசார் வீட்டிற்குள் நுழைந்த நபர் கைது

சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி யின் அதிகாரத்துவ இல்லத்திற்குள் அத்து​மீறி நுழைந்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவரை போ​லீசார் கைது செய்துள்ளனர். சம்பந்தப்பட் நபர், காரின் பின்இருககையில் ஒளிந்து கொண்டு சென்று இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதை ஷா ஆலம் மாவட்ட போ​லீஸ் தலைவர் இக்பால் இப்ராஹிம் உறு​திபடுத்தியுள்ளார். ஆனால், மேல்விபரங்களை வெளியிட அவர் மறுத்து விட்டார்.

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட ​காணொளியின்படி ஷா ஆலமில் உள்ள மந்திரி பெசாரின் அதிகாரத்துவ இல்ல வளாகத்தி​ற்குள் அத்து​மீறி நுழைந்த நிருபர் ஒருவர், வளைத்துப்பிடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபர், இதற்கு முன்பு மந்திரி பெசாரின் இல்லத்தின் வளாகத்திற்குள் நுழைய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்