மன்னிப்பு வாரியத்தின் முடிவை மதிக்க வேண்டும்

டத்தோஸ்ரீ நஜீன் துன் ரசாக்கின் தண்டனை காலத்தை குறைப்பதற்கு மன்னிப்பு வாரியம் எடுத்துள்ள முடிவை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.

இதர உயரிய பரிபாலனங்களைப் போலவே மன்னிப்பு வாரியமும் விளங்குகிறது. அதன் முடிவு மதிக்கப்பட வேண்டும். இது, பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் ஓர் உயரிய பீடமான மன்னிப்பு வாரியத்தினால் எடுக்கப்பட்ட முடிவாகும். அதன் முடிவு எல்லா நிலைகளிலும் மதிக்கப்பட வேண்டும் என்று அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் டத்தோஸ்ரீ அன்வார் இதனை தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்