ஜெம்போல்- லில் மரம் விழுந்ததில் 4 வயதுடைய சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் நேற்று மதியம் 1 மணியளவில் பத்து கிகிர் – ரில் உள்ள பொழுதுபோக்கு மையத்தில் நிகழ்ந்ததாக ஜெம்போல் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிதெண்டன் ஹூ சாங் ஹூக்தெரிவித்தார்.
இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் 9 வயதுடைய சகோதரியும் காயமடைந்துள்ளதாக ஹூ சாங் ஹூக் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர்களின் தந்தை அவ்விருவரையும் குளிப்பதற்கு பொழுதுபோக்கு மையத்திற்கு அழைத்து சென்ற பொழுது இவ்விபத்து நடந்துள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக அவர் ஓர் அறிக்கையில் நேற்று கூறினார்.
பாதிக்கப்பட்ட சிறுவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில் மற்றொருவர் படுங்காயங்களுக்கு ஆளாகி குவாலா பிலாஹ், துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஹூ சாங் ஹூக் விளக்கினார்.