மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 23.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் க்ராஸ்னகோர்ஸ்க் நகரில் உள்ள கிரோக்கஸ் சிட்டி அரங்கில் நேற்றிரவு, 6 ஆயிரம் பேர் அமர்ந்திருந்த இசை நிகழ்ச்சியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் 60 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ள நிலையில் இச்சம்பவத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று விஸ்மா புத்ரா உறுதி செய்துள்ளது.

இந்த துப்பாக்சிச்சூட்டுச் சம்பவத்தில் 145 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் இந்த பயங்கரவாதத் தாக்குதலில் மலேசியர்கள் யாரும் காயம் அடையவில்லை. மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஆகக்கடைசி நிலவரங்களை அறிந்து கொள்வதற்கு மாஸ்கோவில் உள்ள மலேசிய தூதரகம் நடப்பு நிலையை அணுக்கமாக கண்காணித்து வருகிறது என்று விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்