சுங்காய் புலோஹ், மார்ச் 23.
சுங்காய் புலோஹ், புக்கிட் ரஹ்மான் புத்ரா- வில் உள்ள இடைநிலைப்பள்ளி ஒற்றில் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்து நான்காம் படிவ மாணவி உயிரிழந்தார்.
நேற்று காலை 11.20 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடந்த இச்சம்பவத்தை திடீர் மரணம் என்று போலீசார் வகைப்படுத்தியிருப்பதாக Sungai Buloh மாவட்ட போலீஸ் தலைவர் மோஹட் ஹாபிஸ் முஹம்மது தெரிவித்துள்ளார்.
மாணவி மரணம் குறித்து சமூக வளைத்தளங்களில் எந்தவொரு ஆருடத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டாம் என்று பொது மக்களை மோஹட் ஹாபிஸ் கேட்டுக்கொண்டார்.