கோலாலம்பூர், ஜன 29 –
லஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் தாம் குற்றஞ்சாட்டப்பட்டதை விட நடப்பு அரசாங்கத்தினால் மலேசியாவின் எதிர்காலம் குறித்து அதிக கவலைப்படுவதாக கோடிக் கணக்கான சொத்து விவரங்களை அரசாங்கத்திடம் அறிவிக்கத் தவறியதாக இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் துன் டைம் ஜைனுதீன் தெரிவித்துள்ளார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான நடப்பு அரசாஙகம் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது என்றும் சீரமைப்பு என்ற பெயரில் தனது அரசியல் வைரிகளை பழிவாங்குகிறது என்றும் துன் டாயிம் குற்றஞ்சாட்டினார்.
பசுத்தோல் போர்த்திய புலி, சீர்த்திருத்தம் என்ற பெயரில் தனது அரசியல் ஆடு, புலியாட்டத்தில் எதிரிகளை பலிகடாவாக்கி வருகிறது என்று இன்று நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில் துன் டாயிம் மேற்கண்டவாறு கூறினார்.