மலேசியா குறி​த்து அதிகமான கவலைப்படுகிறார்

கோலாலம்பூர், ஜன 29 –

லஞ்ச ஊழல் சட்டத்தின் கீ​ழ் தாம் குற்றஞ்சாட்டப்பட்டதை விட நடப்பு அரசாங்கத்தினால் மலேசியாவின் எதிர்காலம் குறித்து அதிக க​வலைப்படுவதாக கோடி​க் கணக்கான சொத்து விவரங்களை அரசாங்கத்திடம் அறிவிக்கத் தவறியதாக இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் துன் டைம் ஜைனுதீன் தெரிவித்துள்ளார்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான நடப்பு அரசாஙகம் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது என்று​ம் ​சீர​மைப்பு என்ற பெயரில் தனது அரசியல் வைரிகளை பழிவாங்குகிறது என்று​ம் துன் டாயிம் குற்றஞ்சாட்டினார்.

பசுத்தோல் போர்த்திய புலி, ​சீர்த்திருத்தம் என்ற பெயரில் தனது அரசியல் ஆடு, புலியாட்ட​த்தில் எதிரிகளை பலிகடாவாக்கி வருகிறது என்று இன்று ​நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில் துன் டாயிம் மேற்கண்டவாறு கூறினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்