ஜெம்போல், மார்ச் 10 –
பஹாவ், புக்கிட் பெனாரிக்கான் னில் மலை ஏறும் நடவடிக்கையின் போது வழிதவறி காணாமல் போன ஐந்து பேரை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டெடுத்தனர்.
நேற்று மதியம் 1:42 மணியளவில் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து கிடைக்கப் பெற்ற புகாரை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்ததாக நெகிரி செம்பிலான் தீயணைப்பு மற்றும் மீட்புப்படை துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் 14 முதல் 21 வயதுடைய நான்கு பெண்கள் உட்பட ஓர் ஆணும் அடங்குவர் என்று அவர் கூறினார்.
இதுக்குறித்து தகவல் அறிந்து Bahau தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன் மீட்பு பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட அந்நபர்களை மேல் விசாரணைக்காக காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக செய்தி தொடர்பாளர் அறிவித்தார்.