லாஹாட் டத்து, மார்ச் 23.
கல்லூரி தங்கும் விடுதியில் 17 வயது மாணவன் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் இதுவரையில் 13 மாணவர்களை கைது செய்தனர்.
சபா, லாஹாட் டத்து தொழில் நுட்பக்கல்லூரியில் நேற்று காலை நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் புலன் விசாரணைக்கு ஏதுவாக கைது செய்யப்பட்டுள்ள அந்த 13 மாணவர்களும் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று லாஹாட் டத்து மாவட்ட போலீஸ் தலைவர் ரோஹன் ஷாஹ் அஹ்மத் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட மாணவன் உடலில் கடுமையாக காயங்களுடன் தங்கும் விடுதியில் இறந்த கிடந்தது நேற்று காலையில் கண்டு பிடிக்கப்பட்டது. கல்லூரியின் தங்கும் விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்து இருக்கலாம் என்று நம்பப்படுவதாக ரோஹன் ஷாஹ் அஹ்மத் கூறினார்.