மின்னல் தாக்கி விவசாய தொழிலாளி உயிரிழந்தார்

பகாங், ஏப்ரல் 25-

பகாங், பெல்டா ஜெங்க்கா-வில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது இந்தோனேசிய ஆடவர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் விவசாய தொழிலாளியான 40 வயதுடைய கமாருதின் என்கிற அவ்வாடவர் மழையின் காரணமாக ரம்பாய் மரத்தடியில் காத்திருந்த வேளையில் மின்னல் தாக்கி சுயநினைவற்ற நிலையில் இருந்ததை குறித்து அவரின் நண்பர் காவல்துறையில் புகார் அளித்ததாக மாரான், மாவட்ட போலீஸ் தலைவர் துணை கண்காணிப்பாளர் முகமது ஜம்ரி முகமது சாபர் தெரிவித்தார்.

கிடைக்க பெற்ற புகாரை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது அவ்வாடவர் மரத்தடியில் இருப்பதை கண்டறிந்ததாக முகமது ஜம்ரி குறிப்பிட்டார்.

மருத்துவ அதிகாரிகள் அவ்வாடவர் உயிரிழந்ததை உறுதி செய்ததை அடுத்து மேற்கண்ட நடவடிக்கைகளுக்காக அவரின் உடல் ஜெங்க்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக முகமது ஜம்ரி மேலும் தகவலளித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்