முன்னாள் பிரதமர் tan sri முகைதீன் யாசினை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM நடத்தி வரும் விசாரணையில் தாம், சம்பந்தப்படவில்லை என்று பிரதமர் Dato Sri Anwar Ibrahim அறிவித்துள்ளார்.
அரசியல் வாதிகள் சம்பந்தப்பட்டுள்ள நிதி முறைக்கேடுகள் மற்றும் அதிகார துர்ஷ்பிரயோகம் தொடர்புடைய விவகாரம் குறித்த விசாரணைகளில் தாம் தலையிடுவதில்லை.
அதே போன்று, தற்போது SPRM விசாரணை வளையத்திற்குள் இருக்கும் முகைதீன் விவகாரத்திலும் தாம் தலையிட்டதில்லை என்று பிரதமர் விளக்கினார்.
Bumiputera குத்தகையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதித் திட்டமான Janabiwawa தொடர்பில் அந்த ஆணையம் முன்னாள் பிரதமரை விசாரணை செய்து இருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாக அன்வார் கூறினார்.