மாசாய், மார்ச் 17 –
மாசாய், தாமான் ரிந்திங் கில் ஒரு முதியவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் ஐந்து பேரை கைது செய்தனர்.
நேற்று காலை 10:50 மணியளவில் பாதிக்கப்பட்ட 61 வயதுடைய பெரியவரின் உடல் பல வெட்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டதாக Johor போலீஸ் தலைவர் கொமிசியோனர் ம்.குமார் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் சடலம் 24 மணி நேரத்திற்குள் கண்டறியப்பட்ட வேளையில் 35 முதல் 48 வயதிற்கு உட்பட்ட ஐந்து உள்ளூர் ஆண்களை வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டதாக ம்.குமார் கூறினார்.
சந்தேகிக்கும் அந்நபர்கள் பாதிக்கப்பட்டவருக்கு பழக்கமானவர்களாக இருக்கலாம் என்று நம்புவதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக அவர் விவரித்தார்.
கைது செய்யப்பட்ட அந்நபர்கள் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அவர்கள் தடுப்பு காவலில் வைக்க இன்று விண்ணப்பம் சமர்ப்பிக்கபடவுள்ளது என்று ம்.குமார் தெளிவுபடுத்தினார்.