குவா மூசங், மார்ச் 17 –
குவா மூசங், ஜாலான் லாடாங் பெல்ட ஆரிங் 5 வில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் மீது தாய்லாந்து ஆடவர் மோதி உயிரிழந்தார்.
நேற்று மதியம் 3 மணியளவில் பாதிக்கப்பட்ட 36 வயதுடைய புருகெகன் கச்சி , டிராக்டருக்கு முன்னால் செம்பனை பழங்களை இறக்கி கொண்டிருந்த வேளையில் இச்சம்பவம் நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இதுக்குறித்து நேற்று மாலை 5.10 மணியளவில் கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்ததாக Gua Musang மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரின்டென்டன் சிக் சூன் பூ கூறினார்.
பாதிக்கப்பட்ட அவ்வாடவர் டிராக்டர் ரின் முன் செம்பனை பழங்களை இறக்கி கொண்டிருந்த போது திடீரென பிரேக் சரியாக இழுக்கப்படாமல் அந்த வாகனம் முன்நோக்கி சென்றதாக அவர் மேலும் விளக்கினார்.