முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 1 –

சமூக வலைத்தளங்களில் பதிவிடும் கருத்துகள் தணிக்கை செய்யப்படுவதாக முன்னாள் அனைத்துலக வாணிப தொழில் துறை அமைச்சர் டான்ஸ்ரீ ரபிடா அஸிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் கருத்துகள் தணிக்கை செய்யப்படுவதில்லை என்று அண்மையில் அரசாங்கம் தெளிவுபடுத்தியிருந்த போதிலும், தணிக்கை செய்யப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய இருதய சிகிச்கை கழகமான ஐ.ஜ.ன் பணி ஓய்வுப்பெற்ற அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் வெளியிட்ட அறிக்கை குறித்து சமூக வலைத்தளங்களில் தாம் வெளியிட்ட கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்