கோலாலம்பூர், மார்ச் 1 –
இன்று மார்ச் முதல் தேதியிலிருந்து விற்பனை சேவை வரியான ஸ்.ஸ்.தி 8 விழுக்காடு, அறிமுகப்படுத்தப்பட்டதில் தீபகற்ப மலேசியா மற்றும் லாபுவான் ஆகிய பகுதிகளில் நீர் விநியோகத்தில் 87 விழுக்காடு வீட்டு பயனர்களும், 13 விழுக்காடு வீடுகள் சாராத பயனர்களும் வரி விலக்களிப்பை பெறுகின்றனர்.
இவர்கள் ஸ்.ஸ்.தி வரிக்கு உட்பட்டவர்கள் அல்ல என்று எரிபொருள், நீர் உருமாற்ற அமைச்சு ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதேபோன்று சாக்கடை சேவைகளுக்கு 47 லட்சம் பயனர்களுக்கு ஸ்.ஸ்.தி வரியிலிருந்து விலக்களிப்பு வழங்கப்படுவதாக அது அறிவித்துள்ளது.