குற்றஞ்சாட்டப்பட்டவரை விடுவிப்பதற்கு லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக கோலகுபு பாரு செஷன்ஸ் நீதிமன்ற முன்னாள் நீதிபதிக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை ஷா ஆலம் உயர் நீதிமன்றம் இன்று ஒரு நாள் சிறைத் தண்டனையாக குறைத்தது.
அதேவேளையில் அந்த முன்னாள் நீதிபதிக்கு செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த 25 ஆயிரம் வெள்ளி அபராதத் தொகை, 12 ஆயிரம் வெள்ளியாக குறைக்கப்பட்டது.
50 வயதுடைய அஸ்மி முஸ்தாஃபா அபாஸ் என்ற அந்த முன்னாள் நீதிபதி, தனக்கு எதிராக தண்டனையை முற்றாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று செய்து கொண்ட மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
செஷன்ஸ் நீதிமன்றத்தின் அதிகாரத்தில் தலையிட தாம் விரும்பவில்லை என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டு இருப்பதால் ஒரு முன்னாள் நீதிபதியான அஸ்மி முஸ்தாஃபா அபாஸ் குற்றவாளியே என்று உயர்நீதிமன்ற நீதிபதி ஹஸ்புல்லா அடாம் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.