முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் வெளிநாட்டிற்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. பெர்சத்து கட்சித் தலைவருமான முகைதீனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த தடையை எதிர்த்து, சீராய்வு மனு ஒன்று கோலாலம்பூர் உயர் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மலேசியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் நடப்பு நிலவரங்கள் குறித்து அனைத்துலக அரங்கில் முகைதீன் பேசிவிடுவார் என்று அரசாங்கம் அச்சம் கொள்வதால் அந்த முன்னாள் பிரதமர் வெளிநாட்டிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பெர்சத்து கட்சிப் பொறுப்பாளர்கள் தங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தடை ஒரு தவறான நடைமுறையாகும் என்று பெர்சத்து கட்சியின் முக்கியத் தலைவர் ஒருவர் கூகிறார்.