முறையற்ற நீக்கம் – மேல்முறையீடு செய்ய மாட்டேன் !

முன்னாள் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் இஷாம் ஜலீல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறும் கடிதம் கிடைத்ததை உறுதிப்படுத்தினார். ஆனால், அந்த நிக்கமானது, கட்டுழுங்கு வாரியத்தின் மூலம் முடிவு எடுக்கப்படாததால் மேல்முறையீடு செய்ய மறுத்துவிட்டதாக இஷாம் டெரிவித்தார்.

கடந்த புதன்கிழமை நடந்த உச்சமன்றக் கூட்டத்தில் அம்னோவின் தலைவர் ஸாஹிட் ஹமிடி எடுத்த முடிவுதான் இந்த நீக்கம் என இஷாம் குற்றஞ்சாட்டினார். எனவே, தாம் இவ்விவகாரம் குறித்து மேல் முறையீடு செய்வதில் எந்தப் பயனும் இல்லை என இஷாம் மேலும் சொன்னார்.

அம்னோவின் பொதுச் செயலாளர் அஷ்ரஃப் வாஜ்டி டுசுகி கையொப்பமிட்டு இஷாமுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், அக்கட்சியின் சட்டவிதி 5.9 இன் படியும் 10.6 இன் படியும் சிஹாம் உடனடியாகக் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்