பெட்டலிங் ஜெயா, ஏப்ரல் 11 –
இரண்டு தினங்களுக்கு முன்பு தைப்பிங், கமுந்திங்கிற்கும், புக்கிட் மேராவிற்கும் இடையில் இ.டி.ஸ் ரயில் சேவை பாதிப்பினால் சில மணி நேரம் அவதிக்குள்ளாகிய பயணிகளுக்கு முழு பயணக்கட்டணமும் திருப்பித் தரப்படும் என்று மலாயன் ரயில்வே பெர்ஹாட் இன்று அறிவித்துள்ளது.
ரயில் சேவையில் ஏற்பட்ட பாதிப்பினால், தங்கள் பயணத்தை தொடர முடியாமல் போன பயணிகளுக்கு மட்டும் முழுக்கட்டணமும் திருப்பித் தரப்படும் என்று இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் மலாயன் ரயில்வே பெர்ஹாட் தெரிவித்துள்ளது.