கெனிங்கௌ,பிப்ரவரி 25 –
ஜாலான் சூக் தூலிட் டில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் மோதிய தனித்தனி விபத்தில் இருவர் உயிரிழந்த வேளையில் மற்றொருவர் படுங்காயங்களுக்கு ஆளாகினார்.
முதல் விபத்து இன்று நள்ளிரவு 12:15 மணியளவில் ஜாலான் சூக் தூலிட் டில் மூன்றாவது கிலோமீட்டரில் ஹொன்டா 110CC மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சூக் கிலிருந்து துலிட் டிற்கு செல்லும் போது விபத்துக்குள்ளானார்.
இச்சம்பவத்தின் போது 26 வயதுடைய ராயின் டாப் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த தவறி சாலையின் வலது புறத்தில் விழுந்ததாக நம்பப்படுகிறது என்று கெனிங்கௌ மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் யாமில் அனாக் காரை தெரிவித்தார்.
தலையிலும் கை கால்களிலும் ஏற்பட்ட பலத்த காயத்தினால் அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக இன்று யாம்பில் ஆனாக் கூறினார்.