மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்டதில் இரு இளைஞர்கள் மரணம்

கோலா கிராய், ஏப்ரல் 26-

மச்சாங், ஜாலான் கோத்தா பாரு- கோலா கிராய்- யின் 53 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.

இன்று நள்ளிரவு 12.45 மணியளவில் நிகழ்ந்த இக்கோர விபத்தில் 15 மற்றும் 20 வயதிற்கு உட்பட்ட அவ்விரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்தனர்.

கோத்தா பாரு- விலிருந்து கோலா கிராய்- யை நோக்கி பயணித்த யமாஹா Y16ZR மோட்டார் சைக்கிளோட்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்து கொண்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளின் மீது மோதியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக மச்சாங் மாவட்ட போலீஸ் தலைவர்கண்காணிப்பாளர் அகமது ஷாபிகி ஹுசின் தெரிவித்தார்.

இதுக்குறித்து போக்குவரத்து சட்டம் 1987 -இன் 41 (1) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளும்படி அகமது ஷாபிகி கேட்டுக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்