ரந்தாவ் பாஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் விபத்தில் சிக்கினார்

அம்பாங் ஜெயா, மார்ச் 26.

அம்பாங் ஜெயா, ஜாலான் புக்கிட் அந்தரபாங்பங்சா -வில் ரன்த்தாவு பஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ ஸ்ரீ ஜய்லாஹ் மோஹட் யூசோப் பயணித்துச் சென்ற கார் விபத்துக்குள்ளாகியதில் அவர் காயமின்றி உயிர் தப்பியதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 5.08 மணியளவில் டொயோட்டா ஹைலாக்ஸ் மற்றும் மாஸ்டா ஆகிய வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி மோஹட் அசாம் இஸ்மாயில் கூறினார்.

இச்சம்பவத்தின் போது கடுமையான மழை பெய்ந்து கொண்டிருந்ததாகவும் திடீரென்று ஹைலாக்ஸ் ஓட்டுநர் சென்று கொண்டிருக்கும் எதிர்திசையில் Mazda ரக வாகனம் நுழைந்து விபத்துக்குள்ளானதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக மோஹட் அசாம் விவரித்தார்.

இவ்விபத்தில் காயமுற்ற அனைவரும் மேல் சிகிச்சைக்காக அம்பாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதில் Hilux -யில் பயணித்த நான்கு பயணிகளில் ஒருவர் ரன்த்தாவு பஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது கண்டறியப்பட்டதாக மோஹட் அசாம் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்