நீலாய், ஏப்ரல் 08-
இன்று காலை 10.20 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் BMW ரக கார் 100 சதவீதம் எரிந்த நிலையில் அதில் பயணித்த இருவரும் காரில் சிக்கி இறந்ததாக தெரியவந்துள்ளது.
தீயணைப்பு, மீட்புப் நிலையத்திற்கு கிடைக்க பெற்ற புகாரை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக மன்த்தின் தீயணைப்பு, மீட்பு நிலையத்தின் கொமாண்டர் முஹம்மது எப்பென்டி ரஹ்மத் அறிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல் மேற்கண்ட நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அதே வேளையில், லாரியில் பயணித்த மூன்று பேர் இதர காயங்களுடன் சிரம்பான், துவான்க்கு ஜாபார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக முஹம்மது எப்பென்டி ரஹ்மத் மேலும் தெரிவித்தார்.