அம்பாங்,பிப்.12
கடந்த சனிக்கிழமை சீனப்புத்தாண்டு தினத்தன்று மாலை 5 மணியளவில் அம்பாங், தாமான் மூடா உணவகத்தின் முன்புறம் 72 வயது மூதாட்டியின் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவத்தில் அந்த வயதான பெண்மணி படுகாயத்திற்கு ஆளாகினார்.
மோட்டார் சைக்கிளில் வந்த ஆடவன், பின்புறத்திலிருந்து அந்த மூதாட்டியின் தங்கச் சங்கிலி பறித்துக்கொண்டு தப்பிச் சென்றான். தங்க சங்கிலி பறிக்கப்பட்ட போது நிலைத் தடுமாறி சாலையில் விழுந்த அந்த மூதாட்டி, வலது கால் முறிந்ததுடன் கழுத்தில் காயங்கள் ஏற்பட்டன என்று அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முஹமாட் அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் தகவல் கொண்டிருப்பவர்கள், அம்பாங் ஜெயா போலீஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு முஹமாட் அசாம் குறிப்பிட்டார்.