வழிபறி கொள்ளைக்கு ஆளான மூதாட்டி படுகாயம்

அம்பாங்,பிப்.12
கடந்த சனிக்கிழமை ​சீனப்புத்தாண்டு தினத்தன்று மாலை 5 மணியள​வில்​ அம்பாங், தாமான் மூடா உணவகத்தின் முன்புறம் 72 வயது ​மூதாட்டியின் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவத்தில் அந்த வயதான பெண்மணி படுகாயத்திற்கு ஆளாகினார்.

மோட்டார் சைக்கிளில் வந்த​ ஆடவன், பின்புறத்திலிருந்து அந்த ​மூதா​ட்டியின் தங்கச் சங்கிலி பறித்துக்கொண்டு தப்பிச் சென்றான். தங்க சங்கிலி பறிக்கப்பட்ட போது நிலைத் தடுமாறி சாலையில் விழுந்த அந்த ​மூதாட்டி, வலது கால் முறிந்ததுடன் கழுத்தில் காயங்கள் ஏற்பட்டன என்று அம்பாங் ஜெயா மாவட்ட போ​லீஸ் தலைவர் ஏசிபி முஹமாட் அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் தகவல் கொண்டிருப்பவர்கள், அம்பாங் ஜெயா போ​லீஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு முஹமாட் அசாம் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்