ஈப்போ,பிப்.12
லுமுட் அருகில் செகாரி ஆற்றில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டு இருந்த பதின்ம வயதுடைய மூவர் நீரில் மூழ்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இன்று திங்கட்கிழமை பிற்பகல் 3.26 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்ற தீயணைப்பு, மீட்புப்படையினர், அந்த மூவரையும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
16 வயதுடைய இருவரும், 14 வயது ஒருவரும் கம்போங் தஞ்சோங் பத்து செகாரி என்ற இடத்தில் சுங்ஙாய் செம்பிட் ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டும் , குளித்துக்கொண்டும் இருந்த போது நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது என்று பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை செயலாக்க அதிகாரி முஹமாட் ஹபாஃபி முஹமாட் ரசிடி தெரிவித்தார்.