வாகனத்தின் மீது செம்பனை மரம் விழுந்ததில் வயோதிகர் காயம்

பினாங்கு, மார்ச் 27-

பினாங்கு, நிபோங் தெபால், ஜாலான் சுங்கை டூரி-யில் 65 வயது வயோதிக பெண் ஓட்டிச் சென்ற வாகனத்தின் மீது செம்பனை மரம் சரிந்து விழுந்ததில், அவர் படுங்காயங்களுக்கு ஆளாகினார்.

நேற்று மாலையில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் கடும் காயத்திற்கு ஆளாகிய நோர் ஐனி சேனாப்பி – வை பொதுமக்கள் சுங்கை பக்காப் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரது உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்றின் காரணமாக அந்த செம்பனை மரம் சாய்ந்ததாக கூறிய நிபோங் தெபால் தீயணைப்பு மீட்பு படையின் மூத்த அதிகாரிமுஹம்மது பய்ஜால் யூசோப், அச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட வயோதிக பெண் செலுத்திய ஹோண்டா ஜேஸ் வாகனம் சேதமடைந்திருப்பதாக கூறினார்.

பின்னர், பிரத்தியேக உபகரணங்களை கொண்டு தீயணைப்பு மீட்பு படையினர், சரிந்து விழுந்த மரத்தை வெட்டி, அங்கிருந்து அம்மரத்தை அப்புறப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்