விபத்திற்கு முன் காரை ஜேபிஜே துரத்தி சென்றுள்ளது

Sipitang -கில் சாலைப் போக்குவரத்து துறையின் வாகனம் பின் தொடர்வதை உணர்ந்த புரோட்டான் சாகா ரக காரை ஓட்டிச் சென்ற இளைஞன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில் மூவர் படுங்காயங்களுக்கு ஆளாகினர்.

நேற்று மாலை 5.08 மணியளவில் நிகழ்ந்த சாலை விபத்தில் காரை ஓட்டிச் சென்ற 19 வயதுடைய Mohd Khairul Abdullah, 14 வயதுடைய Norsiah@Bibi Faizal சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளையில் 8,16,17 வயதிற்கு உட்பட்ட 3 பயணிகள் படுங்காயங்களுக்கு ஆளாகி இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஒரு பேரங்காடியிலிருந்து Kampung Sibubu – விற்கு செல்லும் வழியில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகி இருப்பதாக Sipitang ஜேபிஜே உறுப்பினரிடமிருந்து கிடைக்கபெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்ததாக Sipitang மாவட்ட போலீஸ் தலைவர் Mail Sundongi கூறினார்.

வீட்டிற்கு செல்லும் வழியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த Sipitang ஜேபிஜே வாகனம் ஒன்று ‘beacon light’ பொருந்தி பின்தொடர்வதை அறிந்த அந்நபர் செய்வதறியாது வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தின் மீது மோதியதாக விசாரணையில் தெரியவந்ததாக Mail Sundongi விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்