விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார்

மெர்சிங், மார்ச் 5 –

மெர்சிங், ஜாலான் என்டாவ் மெர்சிங் சாலையின் 2 ஆவது கிலோ மீட்டரில் நேற்று திங்கட்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தொன்றில் 43 வயது மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்தார்.

உள்ளூரை சேர்ந்த அந்த மோட்டார் சைக்கிளோட்டி, தலையிலும், உடலிலும் பலத்த காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மெர்சிங்கை நோக்கி சென்று கொண்டிருந்த ப்ரோடுவா அசியா கார், U சாலையில் வளைந்த போது, காரின் பின்னால் அந்த மோட்டார் சைக்கிளோட்டி மோதியதாக கூறப்படுகிறது.

இதில் அந்த மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்த வேளையில் கார் ஓட்டுநர் காயமின்றி உயர் தப்பியதாக மெர்சிங் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் ராசாக் அப்துல்லா தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்