தோழியை கொன்றவருக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை

கோலாதிரங்கானு, மார்ச் 5 –

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது தோழியை கொலை செய்த குற்றத்திற்காக 23 வயது பெண்ணுக்கு கோலதிரெங்கானு உயர் நீதிமன்றம் இன்று 30 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

சித்தி னுர் அத்திரா அஸ்மி என்ற ஆறாம் படிவ மாணவியான அந்தப் பெண், கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி காலை 8.30 மணியளவில் உலு திரங்கானு , தெலிமொங், ஜாலான் உக்கிட் தாடோக், கம்பூங் லுபுக் பாது வில் தனது சக பள்ளி மாணவியான 19 வயது சித்தி னுர் சுர்யா இஸ்மாயில் என்பவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

அந்த மாணவி குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் கொலை குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்